சந்திக்காத கண்களில்
இன்பங்கள்
செய்யப்போகிறேன்
சிந்திக்காது சிந்திடும்
கொண்டலாய்
பெய்யப்போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்
மோகம் உன் மீதானேன்
கதைகள் கதைகள் கதைத்து
விட்டுப் போகாமல்?
விதைகள் விதைகள் விதைத்து
விட்டுப் போவோமே
திசையறியா பறவைகளாய்
நீ நான் நீள் வான்
வெளியிலே... பறக்கிறோம்
போகும் நம் தூரங்கள்
நீளம் தான் கூடாதா?
இணையும் முனையம் இதயம்
என்று ஆனாலே
பயனம் முடியும் பயமும்
விட்டுப் போகாதோ
முடிவறியா
அடிவானமாய்
ஏன் ஏன் நீ… நான்…
தினந்தினம்
தொடர்கிறோம்?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக