மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே



மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா ? சாதலா?
பழைகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே , இது ஏனோ ஏனோ ?

உன் தோளில் சாயும்போது , உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடிடுதே

அறியாதொரு வயதில் விதைத்தது …ஒஹோஒ ஒஹோ ஒஹோஒ ஒஹோ
அதுவாகவே தானாய் வளர்ந்தது … ஒஹோஒ ஒஹோ
புதியதாய் ஒரு பூவும் போகையில் ..ஒஹோஒ ஒஹோ ஒஹோ ஒஹோஒ ஒஹோ
அட யாரதை யாரதை பறித்ததோ? ஒஹோஒ ஒஹோ .

உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைன்தடா

நான் கேட்டது அழகிய நேரங்கள் ஒஹோஒ ஒஹோ ஒஹோ ஒஹோஒ ஒஹோ
யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஒஹோஒ ஒஹோ
நான் கேட்டது வானவில் மாயங்கள் ஒஹோஒ ஒஹோ ஒஹோ ஒஹோஒ ஒஹோ
யார் தந்தது வழிகளில் காயங்கள் ஒஹோஒ ஒஹோ

இந்த காதலும் ஒரு வகை சித்திரவதைதான்
அது உயிருடன் எரிகுதுடா!
மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா ? சாதலா?
பழைகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே
பாதைகள் நலுவுதே , இது ஏனோ ஏனோ ?

உன் தோளில் சாயும்போது , உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடிடுதே

ஆத்தாடி ஆத்தாடி - அய்யனார்

படம் : அய்யனார்

பாடல் : ஆத்தாடி ஆத்தாடி

இசை : தமன்.எஸ்

பாடலாசிரியர்: நா.முத்துகுமார்

பாடியவர்கள் : நவீன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மயங்குறேன்டி மயங்குறேன்டி மனசுக்குள்ள வட்டமிட்டு மயங்குறேன்டி

நொருங்குறேன்டி நொருங்குறேன்டி கனவுக்குள்ள சிக்கிக்கிட்டு நொருங்குறேன்டி

ஏங்குறேன்டி ஏங்குறேன்டி தனிமையில புத்திக்கெட்டு ஏங்குறேன்டி

ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன்டி

உன்னை தேடி தேடி திசைமாறி போனேன்டி

ஆத்தாடி ஆத்தாடி காத்தோடுப்போனேன்டி

ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உனைதேடி வந்தேன்டி

காதலாகி காற்றில் ஆடி மிதிக்கிறேன் வாயேன்டி

ஆடி ஆடி தேடி தேடி தவிக்கிறேன் வாயேன்டி

தரையில் வந்தால் ஏந்திக்கொள்ளடி அடி அடி அடி

ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவள் நீ தான்டி

ஆத்தாடி ஆத்தாடி உனக்கென பிறந்தவன் நான் தான்டி

ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்து எனக்கென வந்தேடி

ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவள் நீ தான்டி

தினம் படுத்தும் கண்ணுல எங்கும்

பெண்ணே உன் முகம் தோன்றுதடி

மயங்குறேன்டி மயங்குறேன்டி மனசுக்குள்ள நீ மனசுக்குள்ள

தினம் படுத்தும் கண்ணுல எங்கும்

பெண்ணே உன் முகம் தோன்றுதடி

தினம் நடக்கையில் என் நிழல்

உந்தன் பின்னால் தானே ஓடுதடி

விரும்புறேன்டி விரும்புறேன்டி உன்னால் என்னை விரும்புறேன்டி

திரும்புறேன்டி திரும்புறேன்டி உந்தன் வழி திரும்புறேன்டி

துடிக்கிறேன்டி துடிக்கிறேன்டி மனசுக்குள்ள நீயே நீயே நீ

ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்து எனக்கென வந்தேடி

ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவள் நீ தான்டி

ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன்டி

ஆத்தாடி மனசுகுள்ள தயக்கம் ஏனடி

கொஞ்சம் கண்களால் பாரடி

சம்மதம் சொல்லடி

ஆத்தாடி ஆத்தாடி காத்தோடுப்போனேன்டி

ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உனைதேடி வந்தேன்டி

காதலாகி காற்றில் ஆடி மிதிக்கிறேன் வாயேன்டி

ஆடி ஆடி தேடி தேடி தவிக்கிறேன் வாயேன்டி

தரையில் வந்தால் ஏந்திக்கொள்ளடி அடி அடி அடி

ஆத்தாடி ஆத்தாடி உனக்கென பிறந்தவன் இவன் தான்டி

ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்தோ உனக்கென வந்தான்டி



தெரியாமலே தொலைகிறேன்

உண்மை சுடுகிறதே

அறியாமலே சுவாசமே

காற்றில் கரைகிறதே

என்னை செதுக்கிய பெண்மை அறிகிறேன்

என்னை தழுவியே கடந்து போகும் இந்த பெண்மை....

காதல் புரிகிறதே ..



சந்திக்காத கண்களில் - 180


சந்திக்காத கண்களில்

இன்பங்கள்

செய்யப்போகிறேன்

சிந்திக்காது சிந்திடும்

கொண்டலாய்

பெய்யப்போகிறேன்

அன்பின் ஆலை ஆனாய்

ஏங்கும் ஏழை நானாய்

தண்ணீரைத் தேடும் மீனாய்


ஊகம் செய்தேனில்லை

மோகம் உன் மீதானேன்

கதைகள் கதைகள் கதைத்து

விட்டுப் போகாமல்?

விதைகள் விதைகள் விதைத்து

விட்டுப் போவோமே

திசையறியா பறவைகளாய்

நீ நான் நீள் வான்

வெளியிலே... பறக்கிறோம்

போகும் நம் தூரங்கள்

நீளம் தான் கூடாதா?

இணையும் முனையம் இதயம்

என்று ஆனாலே

பயனம் முடியும் பயமும்

விட்டுப் போகாதோ

முடிவறியா

அடிவானமாய்

ஏன் ஏன் நீநான்

தினந்தினம்

தொடர்கிறோம்?



திறந்தேன் திறந்தேன் நீ முட்டித் திறந்தேன்

என்னுள்ளே நீ வந்து தீ மூட்டத் திறந்தேன்

உறைந்தே உறங்கும் என் உள்ளச் சில்லெல்லாம்

ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்கத் திறந்தேன்

தொலை தொலை என எனை

நானே கேட்டுக்கொண்டேனே

என் மமதையினை!

நுழை நுழை உனை என

நானே மாற்றிக்கொண்டேனே

என் சரிதையினை!

துளையேதும் இல்லாத தேன் கூடோ

நுழைவேதும் இல்லாத ஊன் காடோ

விளைவேதும் இல்லாத மாநாடோ

உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ?

-----

முகத்திரை திருடினாய்

திரைக் கதைப்படி

அகத்தினை வருடினாய்

அதைக் கடைப்பிடி

பெண்ணே உன்னைத் துறவி என்றுதான்

இந்நாள் வரை குழம்பிப் போயினேன்

துறவறம்

துறக்கிறேன்

துளையேதும் இல்லாத தேன் கூடோ

நுழைவேதும் இல்லாத ஊன் காடோ

விளைவேதும் இல்லாத மாநாடோ

உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ?

----

உரிமைகள் வழங்கினேன்

உடை வரை தொடு

மருங்குகள் மீறியே

மடை உடைத்திடு

ஓராயிரம் இரவில் சேர்த்ததை

ஓரீர் நொடி இரவல் கேட்கிறாய்!

பொறுமையின்

சிகரமே!

துளையேதும் இல்லாத தேன் கூடோ

நுழைவேதும் இல்லாத ஊன் காடோ

விளைவேதும் இல்லாத மாநாடோ

உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய் தானோ?


எனதுயிரே எனதுயிரே - பீமா


எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்

எனதுறவே எனதுறவே எனதுறவே கடவுளைப்போல் நீ முளைத்தாய்

நெடுஞ்சாலையில் படும் பாதம்போல் சேர்கிறேன் வாழும் காலமே

வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே

இனி இரவே இல்லை கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை

இனி பிரிவே இல்லை அன்பே உன் உளறலும் எனக்கு இசை

உன்னை காணும் வரையில் எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்

கண்ணால் நீயும் அதிலே எழுதி போனாய் நல்ல ஓவியம்

சிறு பார்வையில் ஒரு வார்த்தையில் தோன்றுதே நூறு கோடி வானவில்

மரம் இருந்தால் அங்கே என்னை நான் நிழல் என விரித்திடுவேன்

இலை விழுந்தால் ஐயோ என்றே நான் இருதயம் துடித்திடுவேன்

இனிமேல் நமது இதழ்கள் இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே

நெடுநாள் நிலவும் நிலவின் களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே

உருவாக்கினாய் அதிகாலையை ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே



பாடியவர் : நரேஷ் அய்யர் , ஸ்ரேயா கோஷல்

படம் : சில்லென்று ஒரு காதல்

இசை : ஏஆர் ரகுமான்

பெண் :முன்பே வா என் அன்பே வா

ஊணே வா உயிரே வா

முன்பே வா என் அன்பே வா

பூப்பூவாய் பூப்போம் வா

நான் நானா கேட்டேன் என்னை நானே

நான் நீயாம் என் நெஞ்சம் சொன்னதே (முன்பே வா)

ரங்கோ ரங்கோலி

கோலங்கள் நீ போட்டாய்

கோலம் போட்டவள்

கைகள் வாழி

வளையல் சத்தம்

ஜல்ஜல்

(ரங்கோ ரங்கோலி )

சுந்தர மல்லிகை

சந்தன மல்லிகை

சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

பெண் : ஆஅ ஆஅ ஆஆஅ

பூவைத்தாய் பூ வைத்தாய்

நீ பூவைக்கோர் பூ வைத்தாய்

மணப்பூவைத்துப் பூவைத்த

பூவைக்குள் தீவைத்தாய் ஓஓ

ஆண்: தேனே நீ நீ மழையில் ஆட

நான் நான் நனைந்தே வாட

என் நாளத்தில் உன் ரத்தம்

நாடிக்குள் உன் சத்தம்

உயிரே ஓஒ

பெண் : தோளில் ஒரு சில நாழி

தனியென ஆனால் தரையினில் மீன் ( முன்பே வா)

ஆண் : நிலவிடம் வாடகை வாங்கி

விழி வீட்டினில் குடி வைக்கலாமா?

நாம் வாழும் வீட்டுக்குள்

வேறாரும் வந்தாலே தகுமா?

பெண் : தேன் மழை தேக்கத்து நீராய்

உந்தன் தோள்களில் இடம் தரலாமா

நான் சாயும் தோள் மேல்

வேறாரும் சாய்ந்தாலே தகுமா?

ஆண்: நீரும் செம்புல சேறும்

கலந்தது போலே

கலந்தவர் நாம் ( முன்பே வா)

(ரங்கோ ரங்கோலி)



நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு

சொன்னால் புரியுமா

அது கொஞ்சி கொஞ்சி

பேசுறது கண்ணில் தெரியுமா

உலகே அழிஞ்சாலும்

உன் உருவம் அழியாதே

உயிரே பிரிஞ்சாலும்

உறவேதும் பிரியாதே

உண்ணாமல் உறங்காமல்

உன்னால் தவிக்கும் பொன்னுமணி

ஏக்கப் பட்டு பட்டு நானிளைத்தேனே

அககா கா கா கக கா கா

ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலித்தேனே

ஒகோ கோ ஓகோ கோ கோ

தூக்கம் கெட்டு கெட்டு

துடிக்கும் முல்லை மொட்டு

தேக்கு மரத் தேகம் தொட்டு

தேடி வந்து தாளம் தட்டு

என் தாளம் மாறதய்யா

உண்ணாமல் உறங்காமல்

உன்னால் தவிக்கும் சிந்தாமணி

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு

சொன்னால் புரியுமா

அது கொஞ்சி கொஞ்சி பேசுறது

கண்ணில் தெரியுமா

உலகே அழிஞ்சாலும்

உன் உருவம் அழியாதே

உயிரே பிரிஞ்சாலும்

உறவேதும் பிரியாதே

உண்ணாமல் உறங்காமல்

உன்னால் தவிக்கும் சிந்தாமணி

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு

சொன்னால் புரியுமா

அது கொஞ்சி கொஞ்சி பேசுறது

கண்ணில் தெரியுமா

காஞ்சிபட்டு ஒண்ணு நான் கொடுப்பேனே

ஒகோ கோ ஓகோ கோ கோ கொய் கொய்

காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே

அககா கா கா கக கா கா

மாமன் உன்னைக் கண்டு ஏங்கும் அல்லி தண்டு

தோளில் என்னை அள்ளிக்கொண்டு

தூங்க வைப்பாய் அன்பே என்று

என் கண்ணில் நீ தானம்மா

உண்ணாமல் உறங்காமல்

உன்னால் தவிக்கும் பொன்னுமணி

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு

சொன்னால் புரியுமா

அது கொஞ்சி கொஞ்சி பேசுறது

கண்ணில் தெரியுமா

உலகே அழிஞ்சாலும்

உன் உருவம் அழியாதே

உயிரே பிரிஞ்சாலும்

உறவேதும் பிரியாதே

உண்ணாமல் உறங்காமல்

உன்னால் தவிக்கும் சிந்தாமணி




படம்: அண்ணா நகர் முதல் தெரு

இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு

மலரும் மலரும் புது தாளம் போட்டு

உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே

நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்

இளஞ்சிட்டு உனை விட்டு

இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம்
அணை போட்டால் தாங்காது... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு

மலரும் மலரும் புது தாளம் போட்டு

இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே

ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே
அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு
ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்
இளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண் பாடும்

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு

மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று





படம்:நாணயம்

பாடகர்கள்: எஸ்.பி.பி, சித்ரா

இசை: ஜேம்ஸ் வசந்தன்



நான் போகிறேன் மேலே மேலே

பூலோகமே காலின் கீழே

விண்மீன்களின் கூட்டம் என்மேலே

பூவாளியின் நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே

நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே

தடுமாறி போனேன் அன்பே உன்னை பார்த்த நேரம்

அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்

ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்

ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம..

னனானன்னானனா னனானன்னானனாஆஆனனானன்னானனாஆஆ

னனானன்னானனா னனானன்னானனாஆஆனனானன்னானனாஆஆ

நான் போகிறேன் மேலே மேலே

பூலோகமே காலின் கீழே

விண்மீன்களின் கூட்டம் என்மேலே

பூவாளியின் நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே

நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே

தடுமாறி போனேன் அன்பே உன்னை பார்த்த நேரம்

அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்

ஏன் உன்னை பார்தேன் உள்ளம் கேள்வி கேட்கும்

ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம..

னனானன்னானனா னனானன்னானனாஆஆனனானன்னானனாஆஆ

னனானன்னானனா னனானன்னானனாஆஆனனானன்னானனாஆஆ

கண்ணாடி முன்னே நின்றே தனியாக நான் பேச

யாரேனும் ஜன்னல் தாண்டி பார்த்தால் அய்ய்யோஓஓ

உள்பக்கம் தாழ்பாள் போட்டும் அரையினுள் நீவந்தாய்

கை நீட்டி தொட்டுப்பார்த்தேன் காற்றை அய்ய்யோஓஓஒ

என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்

பூமாலை செய்தேன் வாடுதே

என் மெத்தை தேடும் போர்வையாவும் சேலையாகாதோ

வாராதோ அந்நாளூம் இன்றேஏஏ..

னனானன்னானனா னனானன்னானனாஆஆனனானன்னானனாஆஆ

னனானன்னானனா னனானன்னானனாஆஆனனானன்னானனாஆஆ

என் தூக்கம் வேண்டுமென்றாய் தரமாட்டேன் என்றேனே

கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்

வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசி பார்த்தேனே

மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்

அன்றாட போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்

காணாமல் போனேன் பாதியில்

நீ வந்து என்னை மீட்டி செல்வாய் என்று இங்கேயே

கால்நோக கால்நோக நின்றேஏஏஏ

நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே

விண்மீன்களின் கூட்டம் என்மேலே

ஹாஆஆ பூவாளியின் நீரைப்போலே

நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே

ஆஆஆஆ தடுமாறி போனேன் அன்பே உன்னை பார்த்த நேரம்

அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்

ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்

ஹஹ ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம..

னனானன்னானனா னனானன்னானனாஆஆனனானன்னானனாஆஆ

னனானன்னானனா னனானன்னானனாஆஆனனானன்னானனாஆஆ


top